மாமியாரிடம் செல்போனை பறித்த கும்பல்...! தட்டிக்கேட்ட மருமகனுக்கு நேர்ந்த சோகம்..! திண்டுக்கல்லில் பரபரப்பு...! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் மாமியாரிடம் செல்போனை பறித்த கும்பலை தட்டிக்கேட்ட மருமகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் உண்டாரபட்டி அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி எட்வின்ஜோஸ்வா(28). இவரது மனைவி கிறிஸ்டி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் எட்வின் ஜோஸ்வாவின் மாமியாரிடம் அதே பகுதியை சேர்ந்த சிலர் பணம் கேட்டு தகராறு செய்துள்ளனர்.

மேலும் மாமியாரிடம் இருந்து செல்போனையும் அந்த கும்பல் பறித்து சென்றுள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து மாமியார் எட்வின் ஜோஸ்வாவிடம் கூறியுள்ளார். இதையடுத்து ஜோஸ்வா, மாமியாரிடம் செல்போனை பறித்த கும்பலிடம் இது குறித்து கேட்டுள்ளார். அப்பொழுது அவர்களுடைய தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் தகராறு முக்கிய நிலையில் ஆத்திரமடைந்த கும்பல் ஜோஷ்வாவை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து பலத்த காயமடைந்த ஜோஸ்வா சிகிச்சைக்காக திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜோஸ்வா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து ஜோஷ்வாவின் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், ஜோஷ்வாவை கொலை செய்த கும்பல் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The gang that beat the son in law to death in Dindigul


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->