பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த காமகொடூரன்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்..! - Seithipunal
Seithipunal


பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.

தேனி மாவட்டம், தேவதானப்பட்டியை பகுதியில் 48 வயதான நபர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 19 வயது மகனும் 17 வயதில் மகளும் உள்ளனர். கணவன்  மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகன் மற்றும் மகளுடன் அந்த பெண் தனியே வாழ்ந்து வருகிறார்.

இதற்கிடையில், 17 வயது மகளுக்கு கடந்த பிப்ரவரியில் குழந்தை பிறந்துள்ளது. சிறுமிக்கு குழந்தை பிறந்ததால் மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த சிறுமியின் உறவினரான வல்லரசுபாண்டியை கைது செய்தனர்.

இதனை அடுத்து, வல்லரசுபாண்டி தனக்கும் அந்த குழந்தைக்கும் எந்த சம்மந்தமில்லை என நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். அதனை அடுத்து மரபணு பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து மேற்கொள்ளப்பட்ட மரபணு பரிசோதனையில் அது வல்லரசுபாண்டி குழந்தை இல்லை என்பது உறுதியானது.

இதனை அடுத்து குற்வாளி யார் என கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது. தீவிர விசாரணை மேற்கொண்டதில் சிறுமி தனது தந்தை வீட்டில் இருப்பதாக காவல்துறையினருக்கு தெரியவந்தது.

அதனை அடுத்து, அவரிடன் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. பெற்ற மகள் என்றும் பாராமல் சிறுமியை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவரவே அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The father who sexually abused his adopted daughter


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->