காதலிப்பதாக ஏமாற்றி 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய.. 2 குழந்தைகளின் தந்தை கைது.! - Seithipunal
Seithipunal


சென்னையில் காதலிப்பதாக ஏமாற்றி 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 2 குழந்தைகளின் தந்தையை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

சென்னை சென்ட்ரல் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் மகேஸ்வரன் (28). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மகேஸ்வரன், பகுதியில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்த 16 வயதுடைய சிறுமியை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து சிறுமி திடீரென மாயமானார். இதைத்தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் நியாயமான சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி மகேஸ்வரன் கடத்திச் சென்றதும், அவர்கள் திருவேற்காட்டில் இருப்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மகேஸ்வரனை கைது செய்தனர்.

மேலும் 7 மாதம் கர்ப்பமாக உள்ள சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The father of 2 children arrested for made a 16 year old girl pregnant in chennai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->