#சென்னை || காரின் மீது மரம் முறிந்து விழுந்ததில் வங்கி மேலாளர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


சென்னையில் காரின் மீது மரம் முறிந்து விழுந்ததில் வங்கி மேலாளர் உயிரிழந்துள்ளார்.

சென்னை போரூரை சேர்ந்த வாணி(வயது57) கேகே நகரில் உள்ள வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

இவர் நேற்று மாலை பணி முடிந்தவுடன சகோதரி எழிலரசி உடன் காரில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்பொழுது பி.டி.ராஜன் சாலை வழியாக கார் வந்து கொண்டிருக்கும்போது அப்பகுதியில் இருந்த மரம் ஒன்று திடீரென வேரோடு முறிந்து காரின் மீது விழுந்துள்ளது.

இதில் வங்கி மேலாளர் வாணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் தங்கை எழிலரசி மற்றும் கார் ஓட்டுநர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்தில் மழை நீர் வடிகால் பணிக்காக பள்ளம் தோண்டியதே மரம் விழ காரணம் என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The bank manager was killed when a tree fell on car


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->