உல்லாசமாக இருந்த பொழுது மரணமா.?! தாராபுரத்தில் தெருவில் நிர்வாணமாக கிடந்த பெண்ணால் அதிர்ச்சி.!
Tharapuram murder case
திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் அருகே இருக்கும் வனப்பகுதியில் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் நிர்வாண நிலையில் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் இதன்பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் தனராஜ், குற்றப்பிரிவு ஆய்வாளர் அன்புச்செல்வி மற்றும் ஆய்வாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த உடலை கைப்பற்றினர்.
பின்னர் மோப்பநாய் அழைத்துவரப்பட்டு அந்த பெண் எப்படி கொலை செய்யப்பட்டார் கொலைசெய்தவர் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனை செய்வதற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைத்துள்ளனர்.
அந்தப் பெண் உல்லாசத்தில் ஈடுபட்டு இருந்த பொழுது கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது நோக்கத்துடன் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தப் பெண் ஏன் நிர்வாண நிலையில் கிடந்தார் என்பது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தாராபுரம் பகுதியில் இது போல நிறைய கொலை சம்பவங்கள் நடைபெற்று வருவதால் அப்பகுதியில் தற்போது பெரும் பரபரப்பும், பீதியும் ஏற்பட்டு இருக்கிறது.