தஞ்சாவூர் | முன்னாள் எம்.பி. காலமானார்!  - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் முன்னாள் எம்.பி. பரசுராமன் (வயது 69) உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலமானார். 

தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி சாலை பகுதியைச் சேர்ந்த இவர் அதிமுகவில் நீண்ட காலமாக இருந்து வந்தார். தஞ்சாவூர் அருகே உள்ள நீலகிரி ஊராட்சி மன்ற தலைவராக இருந்து பின்னர் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

கடந்த 2021 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அதிமுகவிலிருந்து விலகிய பரசுராமன் திமுகவில் இணைந்தார். இதற்கிடையே இதய நோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

பின்னர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இவரது இறுதி ஊர்வலம் நாளை பிற்பகல் 3 மணி அளவில் அவரது இல்லத்தில் இருந்து நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjavur EX MP passed away


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->