சிறுமியை கர்ப்பமாக்கிய நபர், மணமேடையில் இருந்து கழுத்தை பிடித்து இழுத்து சென்ற போலீசார்.!
tenth student rape by three members
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் குண்டலப்பட்டி பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி கொரோனா விடுமுறையால் தனது தாய் வீட்டிற்கு தாய்மாமா வீட்டிற்கும் சென்று வந்துள்ளார். இந்த நிலையில் சிறுமியின் வயிறு பெரிதானது வயிற்றில் கட்டி இருப்பதாக நினைத்து அச்சிறுமியை பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 8 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறினர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து சிறுமிக்கு நடந்தது என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கடந்த 10 மாதங்களில் மூன்று பேர் அந்த சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்தது தெரியவந்தது. தாய் மாமா வீட்டில் தனிமையாக இருந்த சிறுமியை அப்பகுதியை சேர்ந்த 55 வயதுடைய கூட்டுறவு சங்க முன்னாள் ஊழியரான உதயணன் என்பவர் மதுபோதையில் சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகின்றது. அதே ஊரைச் சேர்ந்த ராம்ராஜ், சக்தி ஆகிய இரு இளைஞர்களும் பலாத்காரம் செய்ததால் சிறுமி கர்ப்பம் அடைந்ததாக தெரிகிறது.
இதையடுத்து 55 வயது உதயணனை கைது செய்து போலீசார் விசாரித்தபோது சிறுமியை பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். அதேபோல் சிறுமியை பலாத்காரம் செய்த சக்தி என்பவனுக்கு வியாழக்கிழமை திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமேடையில் பெண்ணுக்காக காத்திருந்த சக்தியை மாலையும் கழுத்துமாக கைது செய்து போலீசார் அழைத்து சென்றனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ராமராஜன் என்பவனும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்
சிறுமியின் வயிற்றில் வளரும் கருவை கலைப்பது உயிருக்கு ஆபத்தாக முடியும் என்பதால் காவல்துறையினர் மருத்துவர்களின் ஆலோசனையை கேட்டு வருகின்றனர்
English Summary
tenth student rape by three members