கனமழை எதிரொலி - 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.!
tenkasi and thoothukudi districts schools holiday for rain
வட தமிழக மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டில் மிக்ஜம் புயல் தாக்கத்தின் காரணமாக கனமழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய மாலத்தீவு பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதலே தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் ஏற்கனவே கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, தென்காசி மற்றும் தூத்துக்குடியில் இரண்டு தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
tenkasi and thoothukudi districts schools holiday for rain