கோவில் முன்பு கழுத்தில் ரத்தம் சொட்ட சொட்ட சென்ற வாலிபர்: நடந்தது என்ன?
teenager blood dripping front temple police investigation
செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே வசித்து வருபவர் பர்கத் பாஷா (வயது 25). இவர் நேற்று மதியம் கூடுவாஞ்சேரியில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் முன்பு இருந்தபோது 4 பேர் கொண்ட கும்பல் திடீரென பர்கத் பாஷாவிடம் தகராறில் ஈடுபட்டது.
பின்னர் அந்த கும்பல் பர்கத் பாஷாவின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து பர்கத் பாஷாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலத்த காயத்துடன் பர்கத் பாஷா இரத்தம் சொட்ட சொட்ட நடந்து சென்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
teenager blood dripping front temple police investigation