பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியருக்கு வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


சமீப காலமபாகவே பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு படம் கற்பிக்கும் ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமையை ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர் வட்டம், திருப்பனந்தாள் அருகே திருவாய்ப்பாடியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள்.

இந்த பள்ளியில் ஆங்கில பாட ஆசிரியராக பணியாற்றி வரும் குறிச்சியைச் சேர்ந்த கண்ணன் மகன் தமிழரசன் என்பவர், அதே பள்ளியில் எட்டாம் வகுப்பு  படத்து வரும் 13 வயது சிறுமியிடம் கடந்த 6-ம் தேதியில் இருந்து பாலியல் வன்கொடுமையை ஈடுபட்டு வந்ததாக தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ந்து போன அந்த மாணவியின் பெற்றோர், சம்பவம் தொடர்பாக திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் கடந்த 13-ம் தேதியன்று புகாரளித்தனர். அந்தப் புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸார் ஆசிரியர் தமிழரசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

teacher harassment to school student in thirupanandal


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->