மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி.. ஆசிரியர் பணியிடை நீக்கம்..!
Teacher fired for sending pornographic text messages to students
ஆசிரியர் பள்ளி மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம், வெள்ளலூர் பகுதியில் அமைந்துள்ள அரசுமேல்நிலைபள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த 100 மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியில் கணினி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் அங்கு பயிலும் மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்புவது ஆபாசமாக பேசுவது என்ற செயல்களை செய்து வந்துள்ளார். இது தொடர்பாக மாணவிகள் புகார் அளித்தும் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த மாணவ மாணவிகள் சாலைமறியலில் ஈடுப்பட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மாணவர்களை சமாதானப்படுத்தி வகுப்பிற்கு அனுப்பி வைத்தனர்.
இதனை அடுத்து, முதன்மை கல்வி அலுவலர் கணினி ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
English Summary
Teacher fired for sending pornographic text messages to students