பள்ளிக்கு வந்த ஆசிரியர் செய்த காரியம்..! ஆசிரியர் தினத்தன்று நடத்த அவலம்.!
teacher drunk and came school
தமிழகத்தில் நேற்று ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் தினம் நிகழ்ச்சி நடந்த நிலையில் இருந்தது. மாணவர்கள் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.
இந்த நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று இருக்கிறது. இந்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவர் தாமஸ். இவர் ஆசிரியர் தினமான நேற்று வகுப்பிற்கு வரும் போதே மது குடித்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து முதல்வர், தாமஸ் குடித்து இருப்பதை உறுதி செய்ததை அடுத்து காவல் நிலையத்தில் ஆசிரியரை பள்ளி நிர்வாகத்தினர் ஒப்படைத்தனர்.
நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய ஆசிரியரே இப்படி குடித்து விட்டு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
teacher drunk and came school