தேர்வு மையத்தில் பிளஸ்-1 மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு - ஆசிரியர் கைது
Teacher arrested for sexually harassing 11th class disabled girl in examination center kanchipuram near
காஞ்சிபுரம் அருகே தேர்வு மையத்தில் பிளஸ் 1 மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் நேற்று (மார்ச் 14) 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. முதல் நாளான நேற்று தமிழ் மொழித் தேர்வு நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் சொல்வதை எழுத சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் முசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பிளஸ்-1 மாணவி ஒருவர் தேர்வெழுத வந்துள்ளார்.
அப்போது அந்த மாணவிக்கு தேர்வு எழுதிக் கொடுக்க நியமிக்கப்பட்ட ஓரிக்கை தனியார் பள்ளி ஆசிரியர் ஜெகநாதன், தேர்வு மையத்தில் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் இதுகுறித்து பாலு செட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து, இந்த புகாரின் அடிப்படையில் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மாணவி மற்றும் ஆசிரியரிடம் தனித் தனியாக விசாரணை மேற்கொண்டு, ஆசிரியர் ஜெகநாதனை கைது செய்தனர்.
English Summary
Teacher arrested for sexually harassing 11th class disabled girl in examination center kanchipuram near