உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. குஷியான தமிழக அரசு..!!
tasmac case in supreme court
தமிழகத்தில் ஊரடங்கு காலத்திலும் டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்துள்ள தமிழக அரசின் முடிவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்தது. இதை தொடர்ந்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. டாஸ்மாக் கடைகளை திறக்க தடை வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
ஊரடங்கு காலத்தில் டாஸ்மார்க் கடைகள் திறக்கலாம் என்றும் தமிழக அரசின் கொள்கை சம்பந்தமான முடிவு என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பிறப்பித்த இடைக்கால தடை தொடரும் என்றும் அதே நேரத்தில் இந்த வழக்கு தொடர்பாக வரும் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தொடர்ந்து விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
English Summary
tasmac case in supreme court