அடுத்த மாதம் இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் விடுமுறை.!
TASMAC 2 day leave
காந்தி ஜெயந்தி (அக்.2), மிலாடி நபி (அக்.19) ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்றும், மிலாடி நபியை முன்னிட்டு அக்டோபர் 19 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என்று டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து அனைத்து மண்டல, மாவட்ட மேலாளர்களுக்கு, டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது,
"வருகின்ற 02.10.2021 அன்று காந்தி ஜெயந்தி (சனிக்கிழமை) மற்றும் 19.10.2021 (செவ்வாய்க்கிழமை) அன்று டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை இருக்காது. இந்த இரு நாட்களில் மாவட்டத்தில் உள்ள கடைகள் மற்றும் பார்களில் எந்த மீறல்களும் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.