சென்னைக்கு மிக கனமழை! எச்சரிக்கை மணியடித்த தமிழ்நாடு வெதர்மேன்! - Seithipunal
Seithipunal


சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.

முகநூல் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் 'தமிழ்நாடு வெதர்மேன்' என்ற பெயரில் மழை குறித்த எச்சரிக்கை மற்றும் வானிலை முன்னறிவுப்புகளை பதிவு பதிவிட்டு வரும், தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், சென்னையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இன்று இரவு முதல் நாளை மதியம் வரை சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். 

இன்று இரவு மிக கனமழை பெய்த தாமதமானால், நாளை அதிகாலை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் சுமார் 10 சென்டிமீட்டர் முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே சென்னை மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, ராயபுரம், வியாசர்பாடி, மண்ணடி, பாரிஸ் கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

மேலும் தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், போரூர், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளிலும் தற்போது (மாலை 7 மணி) பரவலாக மழை பெய்து வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Weatherman heavy rain alert in chennai 712024


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->