தமிழக டாஸ்மாக் நிர்வாகம் திடீர் பரபரப்பு அறிவிப்பு.. இப்படி ஒரு சமூக சேவை..!
Tamilnadu Tasmac Announce Corona Rules for Wine Shop and Liquor Alcohol Drinkers
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்று பல்வேறு கட்டுப்பாடுகள் அதிரடியாக விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, வருமானத்தில் கொடிகட்டி பறந்து, பல குடும்பங்களின் பாராட்டில் நல்லதொரு பிழைப்பு நடத்தி வரும் தமிழக டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பில், " மதுபான கடைகளில் இரண்டு வாடிக்கையாளருக்கு இடையே குறைந்தது 6 அடி சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்.
முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே மதுபிரியர்களுக்கு மதுவகை விற்பனை செய்ய வேண்டும். மதுபிரியர்களை சமூக இடைவெளியை பின்பற்றி வர செய்ய வேண்டும். மதுபான கடையை நாளுக்கு இரண்டு முறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் " என்று தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் நிர்வாகத்தின் பொதுநலன் (.............*..............) புல்லரிக்க செய்கிறது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Tamilnadu Tasmac Announce Corona Rules for Wine Shop and Liquor Alcohol Drinkers