காலியான தொகுதிகளுக்கு தேர்தல் எப்போது?.. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி.!! - Seithipunal
Seithipunal


தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவரிடம் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சத்யபிரதா சாகு தெரிவிக்கையில், 

குடியாத்தம், திருவொற்றியூர், சேப்பாக்கம் ஆகிய மூன்று தொகுதிகளில் தமிழகத்தில் காலியாக உள்ளன. தமிழகத்தில் காலியாக உள்ள மூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தால் மூன்று தொகுதிகளிலும் தேர்தல் நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தேர்தலை நடத்த தமிழக தேர்தல் ஆணையம் தயாராக இருந்தாலும், கொரோனா காரணமாக இந்திய தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவு படி தமிழக தேர்தல் ஆணையம் செயல்படும் என்றும்  சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Regional Election officer Press meet 13 July 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->