கிறிஸ்துவ பாதிரியார் பெனடிக் ஆன்றோ கைது! நர்சிங் கல்லூரி மாணவி பரபரப்பு புகார்!
TamilNadu Kanyakumari father arrested
இளம்பெண் பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த கன்னியாகுமரியை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் பெனடிக் ஆன்றோ கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளியூர் தப்பி செல்ல முயன்ற பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை நாகர்கோவில் பால்பண்ணை பகுதியில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிராமக விசாரணை நடந்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை தலைமையிடமாக கொண்ட கத்தோலிக்க சபையில் பாதிரியாராக இருந்துவருவர் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த பெனடிக்ட் ஆன்றோ.
பின்னர், பிலாங்காலை சர்ச் பாதிரியாராக பொறுப்பேற்ற பெனடிக்ட் ஆன்றோ சில பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியது.
மேலும் ஆபாச சாட்டிங், மன்மத லீலை என அடுத்தடுத்து பாதிரியாரின் விவகாரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பேச்சிப்பாறை நர்சிங் மாணவி பாதிரியார் மீது புகார் அளித்தார்.
புகாரின் பேரில் 5 பிரிவுகளின் கீழ் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து 2 தனிப்படைகள் அமைத்து தேடிவந்த நிலையில், இன்று கைது செய்துள்ளனர்.
English Summary
TamilNadu Kanyakumari father arrested