#BigBreaking: வாரத்தின் 7 நாட்களும் கோவில்களுக்கு செல்ல அனுமதி, கடற்கரைக்கு செல்லலாம் - தமிழக அரசு.! - Seithipunal
Seithipunal


வாரத்தின் 7 நாட்களும் பக்தர்கள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய அனுமதி வழங்கி தமிழக அரசு அறிவித்துள்ளது.

வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத்தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், நவம்பர் 1 ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் கடற்கரை பகுதிக்கு செல்லவும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

இதன் வாயிலாக, தமிழகத்தில் உள்ள கோவில்களில் வாரம் முழுவதும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. பக்தர்கள் கோவில்கள் மற்றும் கடற்கரைக்கு செல்கையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கோவில்களில் இனி இலையில் சோறு., அமைச்சர் அதிரடி அறிவிப்பு.! - Seithipunal

இதனைப்போல, தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கோவிகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில், இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திருவிழாக்கள், பெரு நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான தடைகள் தொடருகிறது. மேலும், மழலையர் பள்ளிகள் மற்றும் நர்சரி, அங்கன்வாடி மையம் முழுமையாக செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்துவகை கடைகளும் இரவு 11 மணிவரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோவில் தரிசன அனுமதி தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது, பாஜக போராட்டம் செய்தது குறிப்பிடத்தக்கது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Govt Announce to Open Public Visit Temple and Beach All Days 14 Oct 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->