தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா.? தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தீவிர ஆலோசனை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள்  கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த உயரதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

 தமிழகத்தில் ஊரடங்கு கட்டுபாடுகளை அமல்படுத்தப்படுத்துவது குறித்தும், தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்துவது குறித்தும் தமிழக முதலமைச்சர் மு‌.க.ஸ்டாலின் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TamilNadu chief minister MK Stalin discuss about increase covid cases


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->