தமிழகம் | பூசைக்கு வந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிறிஸ்தவ பாதிரி ஜான் ராபர்ட் கைது.! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜான் ராபர்ட். இவர் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பாதிரியாராக உள்ளார். 

இவர் தேவாலயங்களுக்கு வரும் மூன்று சிறுமிகள் மற்றும் ஒரு இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் குழந்தைகள் நல அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். 

 

இதனை அடுத்து, குழந்தைகள் நல அதிகாரிகள் தேவாலயத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் விசாரித்ததில் பாதிரியார் ஜான் ராபர்ட் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. 

இது குறித்து குழந்தைகள் நல அதிகாரிகள் மண்டபம் காவல்நிலையத்தில்  புகார் அளித்தனர். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் பாதிரியார் ஜான் ராபர்ட் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu Christian priest John Robert arrested for harassing


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->