தமிழகத்தில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு!
Tamil Nadu again increasing Corona virus
தமிழகத்தில் சுமார் 7 மாதங்களுக்கு பின்னர் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. முன்னதாக தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்த நிலையில் தற்போது இரட்டை இலக்கமாக உயர்ந்துள்ளது.
டிசம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தினசரி பாதிப்பு 9 வரை பதிவாகி இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் மட்டும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 50ஐ நெருங்கியுள்ளது.
பொது சுகாதாரத்துறை, தினசரி கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. அதன்படி தினசரி பரிசோதனை 300ஆக உயர்ந்துள்ளது.
English Summary
Tamil Nadu again increasing Corona virus