எட்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் செய்திபுனல்! வாசகர்களுக்கு நன்றி! - Seithipunal
Seithipunal


தமிழின் முன்னணி இணைய இதழாக இருக்கும் "செய்திபுனல்" நிறுவனமானது 7 ஆண்டுகளை நிறைவு செய்து, எட்டாவது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது.  

தினசரி நிகழ்வுகள், அரசியல், வர்த்தகம், விளையாட்டு, வானிலை, ஆன்மீகம், சினிமா, பொது தகவல்கள், உள்ளூர் மற்றும் உலகச் செய்திகள் என பலவற்றையும் உடனுக்குடன், யாரும் சொல்லாத கோணத்தில், மக்களுக்கு தெரிவிக்கும் நோக்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்நிறுவனம், தற்போது ஏழு ஆண்டுகளை நிறைவு செய்து, எட்டாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. 

மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான இணைப்பு பாலமாக இருப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். மக்களின் பிரச்சினைகளை, மக்களின் பக்கம் நின்று, மக்களுக்காக அரசின் காதுகளுக்கு கேட்டுவிடும் அளவிற்கு துல்லியமான தரவுகளுடன் செய்திகளை கொண்டு சேர்ப்பதில் பெரு மகிழ்வு அடைகிறோம்.  

மக்களின் பேராதரவுடன் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்நிறுவனம் இந்த வருடம் புதிய பொலிவுடன், பல புதிய வசதிகளைக் கொண்டு செயல்பட உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். 

இது நாள் வரை ஆதரவளித்து வரும் அனைத்து வாசகர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன், தொடர்ந்து ஆதரவைத் தந்து ஊக்கமளிக்குமாறும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Leading Digital News Channel Seithipunal Enter Eighth Year 2023


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->