#Breaking :: சென்னை மக்களே உஷார்..!! செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக செம்பரம்பாக்கம், புழல் ஏழைகளுக்கான நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மேலும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 33 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையின் முக்கிய நீராதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று (டிச.12) காலை 9 மணி முதல் 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நீர்வளத்துறை அறிவித்துள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறி நிவாரண முகாம்களில் தங்குமாறும் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

surplus water discharged from Chembarambakkam Lake


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->