தாம்பரம்-திருநெல்வேலி இடையே... கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்..! - Seithipunal
Seithipunal


கோடை காலத்தில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தாம்பரம்-திருநெல்வேலி இடையே கோடைகால சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதன்படி, வண்டி எண் 06031 தாம்பரம் - திருநெல்வேலி கோடை சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து ஏப்ரல் 26, மே 3, 10, 17, 24, (புதன்கிழமை) இரவு 10.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 11.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

எண் 06032 திருநெல்வேலி - தாம்பரம் கோடை சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து ஏப்ரல் 27, மே 4, 11, 18 மற்றும் 25 (வியாழன்) ஆகிய தேதிகளில் மதியம் 1.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2.50 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

எண் 06021 தாம்பரம் - திருநெல்வேலி கோடை சிறப்பு ரயில் ஏப்ரல் 27, மே 4, 11, 18, 25 (வியாழன்) ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து இரவு 9 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.

எண் 06022 திருநெல்வேலி - சென்னை எழும்பூர் கோடை சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து ஏப்ரல் 28, மே 5, 12, 19, 26 (வெள்ளிக்கிழமைகளில்) மதியம் 1 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Summer special train operation between Tambaram to tirunelveli


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->