கோடை வெயிலால் டாஸ்மாக்கில் பீர் விற்பனை அமோகம்..அமைச்சர் முத்துசாமி.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் கோடை வெயில்  100 டிகிரியை கடந்து வெப்ப அலை வீசுகிறது. அரசியல் கட்சிகள் பல ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டு வருகிறது.

திமுக தொழிற்சங்கம் சார்பில், ஈரோட்டில் மூன்று நடமாடும் நீர்,மோர் வழங்கும் வாகனங்கள் தொடங்கப்பட்டது. பின்னர், செய்தியாளர்களை சந்தித்த மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி பேசுகையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுவது போல, பீர் உற்பத்தியை அரசு அதிகரிக்கவில்லை, கோடை வெயில் தாக்கத்தால், டாஸ்மாக் கடைகளில் பீர் வாங்குவோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மற்ற மது வகைகளின் விற்பனை குறைந்துள்ளது.

வெயிலின் தாக்கம் அதிகரிப்பதற்கு சாலை விரிவாக்கத்திற்காக மரங்கள் வெட்டப்பட்டதை சிலர் காரணமாக கூறுகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் பெரிய அளவில் மரம் நடு விழா நடைபெற உள்ளது.எனது அலுவகத்தில் மர கன்று இலவசமாக தரப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

summer heat high sales beer in Tasmac


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->