இதுக்குதான் மருத்துவம் படிச்சியா.? இறந்த மகனை பார்த்து., கத்தி, கதறும் பெற்றோர்.!  - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அருகே ஆகியார் மடம் உதயம் பேலஸ் பகுதியை சேர்ந்த உத்திராபதி என்பவருக்கு உதயராஜ் என்ற மகன் இருக்கின்றார். இவர் மதுரை மருத்துவக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்து வருகின்றார். மயக்கவியல் துறை பாடப்பிரிவில் படித்து வந்த இவர் மதுரை முனிசிபல் காலனி இருக்கும் விஜயகுமார் என்பவரது வீட்டில் தன்னுடைய நண்பர் ராஜேஷ் என்பவர் உடன் தங்கி படித்து வந்துள்ளார்.

நேற்று இரவு கல்லூரி முடிந்து வீடு திரும்பிய அவர் தன்னுடைய நண்பர் வேலைக்கு சென்று விட்டதால் தனியாக இருந்துள்ளார். இன்று காலை வெகு நேரமாகியும் அறை திறக்கப்படவில்லை. இதன் காரணமாக சந்தேகமடைந்த உரிமையாளர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

suicide, madurai, seithipunal

காவல்துறையினர் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கையில் உதயராஜ் அங்கே பிணமாக கிடந்துள்ளார். அவரின் அருகே ஊசி மற்றும் மருந்துகள் சிதறிக்கிடந்துள்ளது. அவர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தகவல் தெரிய வந்திருக்கின்றது.

இந்த நிலையில் உதயராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். உதயராஜ் அறையில் வேலைப்பளு காரணமாக தற்கொலை செய்து கொள்கிறேன் என கடிதம் எழுதி வைத்து இருக்கிறார்.

தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரின் பெற்றோர் இதுக்கு தான் மருத்துவம் படிச்சியா.? மருத்துவமனையில் கத்தி கதறி அழுவது காண்போருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

suicide medical collage student


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->