குளிக்க சென்ற மாணவன் ஏரியில் மூழ்கி உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குளிக்க சென்ற மாணவன் ஏரியில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.

விழுப்புரம் மாவட்டம் பெரியசெவலை பகுதியை சேர்ந்தவர் விவசாயி சீனு. இவருடைய மகன் சிம்பு. இவர் அதே பகுதியில் படித்து வந்தார். இந்நிலையில் சிம்பு நேற்று மாலை கொரட்டூரில் உள்ள ஏரிக்கு குளிக்க சென்றுள்ளார்.

அப்பொழுது ஏரியில் குளித்துக் கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி சிம்பு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருநாவலூர் போலீசார், உயிரிழந்த சிம்புவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டையம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Student drowned in lake


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->