மின்னல் தாக்கி பலியான மாணவர்.. ராமநாதபுரம் அருகே நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


மின்னல் தாக்கி பள்ளி மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள நயினார் கோவிலில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த பல மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், அந்த பள்ளியில் தாழையடி பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவன் கஜினி படித்து வருகிறார். சம்பவதன்று, அவர் பள்ளி முன் விளையாடி கொண்டிருந்த போதுபோது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியது.

படுகாயமடைந்த அவரை மீட்ட ஆசிரியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக பலியானார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபாரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Student After Lighting


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->