தனியாக இருக்கும் பெண்களிடம் நூதன முறையில் திருட்டு - போலீசாரின் வலையில் சிக்கிய முக்கிய குற்றவாளி!
Stealing from single women
பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை கண்டறிந்து கொள்ளையடித்துவிட்டு அவர்கள் இது குறித்து புகார் அளிக்காமல் இருக்க பாலியல் வன்கொடுமை செய்து வந்த பிரபல கொள்ளைக்காரரை சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை அருகே இளம் பெண் ஒருவர் கடந்த 5 ஆம் தேதி வேலை முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத ஒரு நபர் அந்த பெண்ணை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது குறித்து சாமல்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது இதே போல் பல சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து ஊத்தங்கரை டிஎஸ்பி தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து நவீன தொழில்நுட்ப வசதியுடன் தீவிர விசாரணை நடத்தி கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் (வயது 36) என்பவர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபராக இருப்பதை கண்டறிந்தனர்.
மேலும் இவர் சென்னை புழல் சிறையில் இருந்து வெளியே வந்ததும் இவருக்கு சென்னையில் இரண்டு நண்பர்கள் உள்ளனர் என்பதும் தெரிய வந்தது. போலீசார் சென்னையில் இருக்கும் இவரது இரண்டு நண்பர்களின் மூலம் முருகனை கைது செய்தனர்.
மேலும் இவர் மீது சென்னை, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. போலீசார் கைது செய்யப்பட்ட முருகனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், முருகனைக் கைது செய்த டிஎஸ்பி தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு டிஜிபி நேற்று நேரில் அழைத்துப் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
இது தொடர்பாக டிஜிபி தெரிவித்திருப்பதாவது, இதுபோன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்து புகார் அளிக்காமல் இருந்தால் குற்றம் செய்த செய்பவர்களுக்கு துணிச்சலை அதிகரிக்கும்.
இதனால் பொதுமக்கள் தைரியமாக காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும். அவ்வாறு புகார் அளிக்கப்படும் விபரங்கள் ரகசியமாகவே வைக்கப்படும் என்றார்.
English Summary
Stealing from single women