நான் திமுகவை சேர்ந்தவனா.?........ - ஸ்டாலின் கேட்ட கேள்வியால் உடன்பிறப்புக்கள் அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


திமுகவின் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் வாழ்க்கை வரலாறு குறித்து பெருமையாக பேசி நூலை வெளியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின் மிசா குறித்து சர்ச்சை கருத்துகளை பேசியிருக்கின்றார்.

சேலம் மாவட்டத்தை தனது கையில் வைத்திருந்தவர் என்றால் அது திமுகவின் வீரபாண்டி ஆறுமுகம் தான். அவர் இருந்தவரை சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு துரும்பைக் கூட அவர் அனுமதி இல்லாமல் அசைக்க முடியாது என்பதை இன்றளவும் அப்பகுதி மக்கள் ஒப்புக் கொள்கின்றனர்.

இந்நிலையில் 'திராவிட இயக்கத்தில் என் பயணம்' என்ற தலைவர் வீரபாண்டி ஆறுமுகத்தின் வாழ்க்கை வரலாற்று குறித்த நூலை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று சேலத்தில் கலந்துகொண்டு வெளியிட்டார். அப்பொழுது அவர் தொண்டர்களிடம் உரையாற்றினார்.

அதில், "தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு பெயர் இருக்கும். ஆனால், சேலம் மாவட்டத்தை எப்பொழுதும் நாங்கள் வீரபாண்டியார் மாவட்டம் என்றுதான் அழைப்போம். அந்த அளவிற்கு சேலம் மாவட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் வீரபாண்டியார்.

ஸ்டாலின் மிசா கைதியா என்ற விவாதம் தற்போது இருந்து வருகிறது. ஸ்டாலின் திமுகவைச் சேர்ந்தவனா என்று எந்த முட்டாளாவது கேட்பானா.? அப்படி ஒரு முட்டாள்தனமான கேள்வி தான் மிசா வழக்கு குறித்து தற்போது எழுப்பப்பட்டு வருகிறது." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin speech on veerapandiyan book release


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->