இலங்கை கடற்படை, கடற்கொள்ளையர்கள் வெறிச்செயல்.. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல், கொள்ளை, மிரட்டல்.!
SriLanka Navy and Pirates Attacked Tamilnadu Fisherman in Diff Location
இலங்கை கடற்படை மற்றும் கடற் கொள்ளையர்கள் வெவ்வேறு இடங்களில் தமிழக மீனவர்களிடம் அத்துமீறி அராஜகம் செய்த சம்பவம் நடந்துள்ளது.
தமிழகத்தை சார்ந்த மீனவர்கள் மீது ஆணவ எண்ணம் கொண்ட சிங்கள கடற்படை, சிங்கள மீனவர்கள் தாக்குதல் நடத்துவதும், அவர்களின் வலைகளை சேதப்படுத்தி அழிப்பதும், படகுகள் மீது தாக்குதல் நடத்துவதும் தொடர்கதையாகியுள்ளது. கடந்த சில வருடமாக துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்படும் நிகழ்வுகள் நடக்கவில்லை என்றாலும், துப்பாக்கியால் சுட்டு படகுகளை சேதப்படுத்தி மீனவர்களை விரட்டும் சோகம் நடந்து தான் வருகிறது.
தற்போது, ஆணவ சிங்கள கடற்படை மற்றும் சிங்கள மீனவர்களுடன், சிங்கள கொள்ளைக்கார கும்பலும் தமிழக மீனவர்களை தாக்க தொடங்கியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோடியக்கரை, கீச்சாங்குப்பம் பகுதியை சார்ந்த மீனவர்கள் கோடியக்கரையில் இருந்து 12 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக்கொண்டு இருந்துள்ளனர். இதன்போது, அங்கு சிங்கள கடற்கொள்ளையர்கள் வந்துள்ளனர்.
தமிழக மீனவர்களின் படகுகளுக்கு வந்த சிங்கள கடற்கொள்ளையர்கள், கழுத்தில் கத்தி வைத்து ரூ.2 இலட்சம் மதிப்பிலான வலையை பறித்து சென்றுள்ளனர். கோடியக்கரை மீனவர்களிடம் இருந்து ரூ.4 இலட்சம் மதிப்புள்ள வலைகள் மற்றும் பேட்டரி போன்றவற்றை பறித்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்துடன், இன்று சிங்கள கடற்படையும் மற்றொரு பகுதியில் தமிழக மீனவர்களிடம் அத்துமீறியுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமேஸ்வரம் பகுதியை சார்ந்த மீனவர்கள் 3 விசைப்படகுகளுடன் மீன்பிடிக்க சென்ற நிலையில், 3 விசைப்படகுகளை இலங்கை கடற்படை விரட்டி அடித்துள்ளது. மேலும், வலைகளை வெட்டி கடலிலேயே வீசி சேதப்படுத்தி மிரட்டி அனுப்பியிருக்கிறது. இதனால் பெரும் நஷ்டம் மற்றும் ஏமாற்றத்துடன் மீனவர்கள் கவலையோடு கரைதிரும்பி இருக்கின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
SriLanka Navy and Pirates Attacked Tamilnadu Fisherman in Diff Location