நள்ளிரவு நேரத்தில் இடிந்து விழுந்த ஸ்ரீரங்கம் கோவில் சுவர்.. பக்தர்கள் பதற்றம்.! - Seithipunal
Seithipunal


திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் தான் ஸ்ரீ ரங்கநாதசுவாமி திருக்கோயில். இந்த கோவிலுடைய கிழக்கு வாசலின் நுழைவு கோபுரத்தின் இரண்டாம் நிலை, மற்றும் முதல் நிலை சுவர்கள் சில நாட்களாக விரிசலுடன் காணப்பட்டன.

இந்த சுவர்களில் ஏற்பட்ட விரிசல்களை சரிசெய்வதற்காக அங்கு தற்போது பணிகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில், விரிசல் விழுந்திருந்த அந்த கிழக்கு கோபுரத்தின் முதல் நிலை சுவர் நேற்று நள்ளிரவு 01:50am மணியளவில் இடிந்து விழுந்துள்ளது.

நள்ளிரவு நேரம் என்பதால் அப்பகுதியில் யாரும் இல்லாத காரணத்தால் சுவர் இடிந்ததில் யாருக்கும் எந்த வித அசம்பாவிதமும், உயிர்சேதமும் ஏற்படவில்லை. இவ்வாறு கிழக்கு கோபுரத்தின் முதல் நிலை சுவர் இடிந்து விழுந்துள்ள செய்தி பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நள்ளிரவு நேரத்தில் யாரும் எதிர்பாராத நிலையில், கோவிலின் சுவர் இடிந்து விழுந்த காரணத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sri Rangam east wall broken


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->