நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!!
Sri Lankan pirates attack Nagapattinam fishermen
நாகப்பட்டினம் மாவட்டம் வாழவன் மகாதேவி மீனவ கிராமத்திலிருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது நேற்று இரவு 8 மணி அளவில் அதிவேக படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களின் படகை சுற்றி வளையத்து மீனவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளனர்.
அத்தோடு 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 700 கிலோ மீன்பிடிவாலைகள், ஜிபிஎஸ் கருவிகள், தங்க சங்கிலிகளை பறித்துள்ளனர். அதனை தடுத்த தமிழக மீனவர்கள் 5 பேரின் கைகளை பின்னால் கட்டி கடலில் தள்ளி கொடுமைப்படுத்தி உள்ளனர். பின்னர் அங்கிருந்து இலங்கை கடல் கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
படுகாயங்களுடன் பைபர் படகு மூலம் கரை திரும்பிய மீனவர்களை மீட்ட மீனவ கிராம மக்கள் சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்கொள்ளையர்கள் ரப்பர் தடியால் தாக்கியதில் 9 மீனவர்களுக்கும் கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளதால் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாகை மாவட்டம் மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Sri Lankan pirates attack Nagapattinam fishermen