செல்போனால் பறிபோன மகன் உயிர்.! விரக்தியில் தாயும் தற்கொலை.!
son sucide for parents scolding in karoor
செல்போனால் பறிபோன மகன் உயிர்.! விரக்தியில் தாயும் தற்கொலை.!
கரூர் மாவட்டத்தில் உள்ள சுண்டுகுழிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்-சுமதி தம்பதியினர். இவர்களது மகன் செல்வராஜ். பட்டதாரியான இவர், கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளராக பணி புரிந்து வந்தார்.
இந்த நிலையில் செல்வராஜ் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். அதன் பின்னர் அவர் வேலைக்கு செல்லாமல், எப்பொதுழும் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். இதை கவனித்த அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த செல்வராஜ் அருகிலுள்ள காட்டு பகுதிக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு மைலம்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரி சோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
மகன் இறந்ததை அறிந்த தாய் சுமதி, விரக்தியில் அரளி விதையை அரைத்து சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் சுமதி திடீரென வாந்தி எடுத்ததால் சந்தேகமடைந்த உறவினர்கள் அவரை மருத்துவனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சுமதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஒரே நேரத்தில் தாய் மகன் உரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசாரும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
son sucide for parents scolding in karoor