தாயை கொன்று புதைத்த மகன்.. சொத்து தராததால் மகன் துணிகரம்..! - Seithipunal
Seithipunal


சொத்து தகராற்றில் மகனே தாயை கொலை செய்து புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம், அமிர்தராயங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் காமாட்சி. இவருக்கு 3 மகள்களும் 2 மகனும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி கணவர் வீடுகளில் வசித்து வருகின்றனர்.

இவரது இளைய மகன் செல்வம் (40) தனது குடும்பத்தாருடன் வசித்து வரும் நிலையில் காமாட்சி மட்டும் தனியாக வசித்து வருகிறார், அவர் தனது ஒரு ஏக்கர் நிலத்தை மகளுக்கு எழுதி வைக்க முடிவு செய்துள்ளார். இதற்கு மகன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் காமாட்சி மாயமானார். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் அவரின் மகள் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில், செல்வன் மீது காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. சொத்து எழுதி தராததால் ஆத்திரத்தில் தாயை அடித்து கொன்றுவிட்டு அங்குள்ள ஓடை ஓன்றில் புதைத்துள்ளார்.

மேலும், தன் மீது யாருக்கும் சந்தேகம் வர கூடாது என்பதற்காக தாயை காணாது தற்கொலை செய்து கொள்வதாக நாடகமாடியதாகவும் தெரிவித்தார். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில்  காமாட்சியின் உடலை தொண்டி எடுத்து பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Son kills His Mother Near Ariyalur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->