தந்தையை இரும்பு கம்பியால் தாக்கிய மகன் கைது.!
Son arrested for beating father with iron rod in kirishnagiri
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சொத்து தகராறில் தந்தையை இரும்பு கம்பியால் தாக்கிய மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மெட்டப்பள்ளி காமராஜ நகரை சேர்ந்தவர் சாமிநாதன் (59). இவரது மகன் சந்திரன் (37). இந்நிலையில் பூர்விக சொத்தை தனக்கு பிரித்து தரவேண்டும் என்று சந்திரன், தந்தை சாமிநாதமிடம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றும், சொத்தைப் பிரித்து தர கேட்டு தந்தையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சந்திரன், ஆத்திரமடைந்து இரும்பை கம்பியால் தந்தை சாமிநாதனை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த சாமிநாதன் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சுவாமிநாதன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த சிங்காரப்பேட்டை போலீசார், சந்திரனை கைது செய்தனர்.
English Summary
Son arrested for beating father with iron rod in kirishnagiri