திடீரென அடித்த அலாரம்.. ஓடிவந்த போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை அருகே இருக்கும் ஏடிஎம் இயந்திரத்தை மர்மநபர் ஒருவர் உடைக்க முயற்சித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. 

நேற்று முன் தினம் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை புது ஓட்டல் தெருவில் இருக்கும் ஒரு ஏடிஎம் எந்திரத்தில் இருந்து 12.25 மணிக்கு thiederana அலாரம் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அப்பகுதி பொது மக்கள் ஜோலார்பேட்டை காவல் நிலையத்துக்கு இதுகுறித்து தகவல் அளித்துள்ளனர். 

உடனடியாக அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் வந்து சேர்ந்துள்ளனர். அப்போது அங்கிருந்த ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. 

'இதனை தொடர்ந்து காவல்துறையினர் வங்கி ஊழியர்கள் சிலரை வரவழைத்து அலாரத்தை நிறுத்தி இருக்கின்றனர். அங்கிருந்த சிசிடிவி கேமராவில் ஆய்வு செய்த பொழுது முகத்தில் முகமூடி அணிந்த நபர் ஒருவர் இரவு 12 மணி அளவில் ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்து எந்திரத்தை இரும்புக் கம்பியால் உடைக்க முயற்சித்துள்ளார். 

அதன் பின்னர், அங்கு அலாரம் சத்தம் கேட்ட உடன் அவர் அங்கிருந்து தப்பி ஓடி இருக்கின்றார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து முகமூடி அணிந்து வந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

some one trying to stolen vellore ATM


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->