தன் வினை தன்னை சுடும்.. ஓடும் ரயிலில் திருட்டு.. கால் நசுங்க ஆண்டவன் கொடுத்த தண்டனை.!  - Seithipunal
Seithipunal


தன்வினை தன்னைச்சுடும் என்ற பழமொழியை உண்மையாக்கும் வகையில் ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட திருடன் தவறி விழுந்ததில் ரயில் சக்கரத்தில் கால் சிக்கி சிதைந்து போன சம்பவம் அரங்கேறியுள்ளது. 

சென்னையில் 'அட்டை' என்று அழைக்கப்படும் நவீன் என்ற இளைஞர் திருடுவதை தொழிலாக கொண்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே ஆறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. 

சென்னை புறநகர் ரயில்களில் இனி அந்த தடை கிடையாது.! தெற்கு ரயில்வே அதிரடி  அறிவிப்பு.! - Seithipunal

நவீன் என்று அழைக்கப்படும் அந்த இளைஞர் மெதுவாக செல்கின்ற ரயிலில் ஜன்னல் வழியாக செல்போன் பறிப்பது மற்றும் படிக்கட்டில் நிற்கின்ற பயணிகளிடம் செல்போன் பறிப்பதை தனது தொழிலாக கொண்டுள்ளார். 

சம்பவ தினத்தன்று ஒரு பயணி படிக்கட்டில் செல்போன் பயன்படுத்திக் கொண்டு இருந்தார். அப்பொழுது ஓடும் ரயிலில் அவரிடம் இருந்து செல்போனை பறிக்க நவீன் முயற்சித்த பொழுது கால் இடறி கீழே விழுந்து அவரது கால்கள் ரயில் சக்கரத்தில் சிக்கியுள்ளது. இதனை தொடர்ந்து, அவரை மீட்ட ரயில்வே காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

snatching cell phone theft struggling train wheel


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->