மதுரை || மகளின் குழந்தையை விற்பனை செய்த தாய் - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
six peoples arrested for sale baby in madurai
மகளின் குழந்தையை விற்பனை செய்த தாய் - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
மதுரை மாவட்டத்தில் உள்ள பேரையூர் அருகே சந்தையூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவருடன் கோவையை சேர்ந்த செல்வக்குமார் என்பவருக்கு வேலைக்கு சென்ற இடத்தில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் வரைமுறையில்லாமல் நெருக்கமாக மாறியதில், சிறுமி கர்ப்பமாகியுள்ளார்.
அதன் படி அவருக்கு கடந்த 7-ம் தேதி பேரையூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து தகவலறிந்த சந்தையூர் கிராம செவிலியர் காந்திமதி, அந்த சிறுமியின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது குழந்தை வீட்டில் இல்லை. இது தொடர்பாக செவிலியர் காந்திமதி சிறுமியிடம் விசாரித்த போது, அவர் தனது குழந்தையை தாயாரிடம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து தாயாரிடம் கேட்டதற்கு அவர் குழந்தை குறித்து எந்தவித தகவலும் தெரிவிப்பதற்கு மறுத்து விட்டார். இதனால், சந்தேகமடைந்த செவிலியர் காந்திமதி பேரையூர் காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்தார். அதன் படி போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
அந்த விசாரணையில், சிறுமியின் தாய்க்கும், சுந்தரலிங்கம் என்பவருக்கும் இருந்த தகாத உறவினால் சிறுமியின் குழந்தையை வளர்ப்பதை அவமானமாக கருதி இருவரும் சேர்ந்து குழந்தையை உசிலம்பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் மூலம் விற்பனை செய்வதற்கு முடிவு செய்துள்ளனர்.
அதன் படி அவர் ஈரோட்டில் திருமண தகவல் நிலையம் நடத்தி வரும் கார்த்திக் என்பவரை தொடர்பு கொண்டு பெங்களூரை சேர்ந்த கார்த்திகேயன், சீனிவாசன் உள்ளிட்டோர் மூலம் பெங்களூரை சேர்ந்த எல்.ஐ.சி ஊழியர் தேஜேஸ்வரியிடம் ரூ.8.20 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று குழந்தையை மீட்டனர். பின்னர் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட தாய், சுந்தரலிங்கம், தேஜேஸ்வரி, கார்த்திகேயன், சீனிவாசன் உள்ளிட்டோரை கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
six peoples arrested for sale baby in madurai