விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்திலேயே சிகிச்சைக்கு பயணம்.. நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ஓட்டுநர், நடத்துனர்.! - Seithipunal
Seithipunal


சாலையில் சென்ற மூதாட்டி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து ஏற்பட்ட நிலையில், அவசர உதவிக்காக காத்திருக்காமல் பேருந்திலேயே மூதாட்டியை மருத்துவமனையில் அனுமதி செய்த சம்பவம் நடந்துள்ளது. 

சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி 100 அடி சாலையில் சென்றுகொண்டிருந்த மூதாட்டி மீது, அப்பகுதி வழியாக சென்ற அரசு பேருந்து மோதி உள்ளது. பேருந்து மோதியதில் மயங்கி விழுந்த மூதாட்டி சுயநினைவின்றி கிடந்துள்ளார். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர், மூதாட்டிக்கு தண்ணீர் கொடுத்து அவரை எழுப்பியுள்ளனர். மூதாட்டி ஓரளவு சுய நினைவுக்கு வந்துவிடவே, அவசர ஊர்திக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவசர ஊர்தி வரும் வரை காத்திருக்க வேண்டாம் என்று நினைத்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் ஆய்வாளர் பேருந்து மூலமாகவே மூதாட்டியை அழைத்து சென்று மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் மூதாட்டி சிகிச்சை பெற்று வருகிறார். 

காவல் ஆய்வாளர், ஓட்டுநர், நடத்துனர் ஆகியோர் அவசர ஊர்திக்காக காத்திருக்காமல் விரைந்து மூதாட்டியை சிகிச்சைக்கு அழைத்து வந்தது பெரும் பாராட்டை பெற்று வருகிறது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivaganga Govt Bus Accident Aged Woman Sent Treatment to Hospital on Bus


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->