அக்கா தங்கைக்குள் தகராறு.. தாயின் கண்டிப்பால், அரங்கேறிய சோகம்.. பெற்றோர்களே கவனம்.!! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு பகுதியைச் சார்ந்தவர் செபாஸ்டின். இவர் புதுவை மாநிலத்தில் உள்ள சேதராப்பட்டு சரஸ்வதி நகரில் கடந்த 8 வருடமாக குடும்பத்துடன் தங்கியிருந்து, அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 

இவரது மனைவி சத்ய சுதா. இவர்களுக்கு கௌசிகா என்ற 14 வயது மகளும், ஆஷிகா என்ற 12 வயது மகளும் என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். மூத்த மகள் கவுசிகா அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஒன்பதாம் வகுப்பு செல்ல தயாராக இருந்தார். 

நேற்று முன்தினம் போது அவரது தங்கை ஆசிகாவிற்கு இடையே தொலைக்காட்சியில் சேனல் மாற்றுவது தொடர்பாக சண்டை ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில், தாயார் சத்ய சுதா தங்கையிடம் விட்டுக்கொடுத்து செல்லுமாறு கவுசிகாவை கண்டித்துள்ளார். 

இதனால் மனமுடைந்த அவர் வீட்டின் அறைக்குள் சென்று கதவை தாளிட்டுக்கொண்ட நிலையில், நீண்ட நேரம் கதவு திறக்கப்படாமல் இருப்பதை கண்டு சந்தேகமடைந்த செபஸ்டின் கதவை திறந்து பார்க்கையில், மின்விசிறியின் துப்பட்டாவால் தூக்கு போட்டு கௌசிகா தூக்கில் தொங்கியுள்ளார். 

இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த இருவரும் மகளை உடனடியாக மீட்டு அங்குள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sisters fight suicide police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->