சென்னை விமான நிலையத்தில் 7 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள மீனம்பாக்கத்தில் பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்திற்கு, துபாயில் இருந்து பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னை மண்டல மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

உடனே வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், விமான நிலையத்திற்கு வந்து, துபாயில் இருந்து விமானத்தில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர். அப்போது பெண் பயணி ஒருவரின் பெட்டியில் தங்கக் கட்டிகள் மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து அதிகாரிகள் அந்த பெட்டியை திறந்து சுமார் 7 கிலோ எடையுள்ள ரூ.3.5 கோடி மதிப்பிலான தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்தப் பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தினர். 

அதில், அந்த பெட்டியை வேறு இரண்டு நபர்கள் தன்னிடம் கொடுத்ததாக தெரிவித்தார். இதை தொடர்ந்து, வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அந்த இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seven kilo gold seized in chennai airport


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->