லாரி மீது மோதிய கார்: சிறுவர் உள்பட 2 பேர் பரிதாப பலி! சேலத்தில் பதற்றம்.! - Seithipunal
Seithipunal


சேலம், கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவர் உள்பட இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சேலத்திலிருந்து கொண்டலாம்பட்டி ரவுண்டானா வழியாக இன்று அதிகாலை 3.20 மணியளவில் வந்து கொண்டிருந்த காரில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 22) மற்றும் கௌதம் (வயது 16) ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். 

அந்த காரை சுந்தர மணிகண்டன் (வயது 27) என்பவர் ஓட்டி சென்றார். கார் ரவுண்டானா அருகே சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு சுவரில் மோதி முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் காரில் பயணம் செய்த மணிகண்டன், கௌதம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காரை ஓட்டி வந்த மணிகண்டன் காயமடைந்த நிலையில் மீட்க பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

மேலும் இது குறித்த தகவல் அறிந்த போலீசார் சமத்துவ இடத்துக்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Selma car collided with lorry 2 people killed


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->