சேலம் || விஷம் குடித்துவிட்டு பள்ளிக்கு சென்ற மாணவி; மயங்கி விழுந்து உயிரிழப்பு.!
school student sucide in salem
சேலம் || விஷம் குடித்துவிட்டு பள்ளிக்கு சென்ற மாணவி; மயங்கி விழுந்து உயிரிழப்பு.!
சேலம் மாவட்டத்தில் உள்ள குட்டகரை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி மகள் மேகவர்த்தினி. இவர், பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவருடைய தாயார் சத்யா, பல ஆண்டுகளுக்கு முன்பாகவே இறந்து விட்டதால் மேகவர்த்தினி தனது தாத்தா- பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.
இந்த நிலையில், மேகவர்த்தினி நேற்று காலை பள்ளிக்கு வழக்கம் போல் வந்துள்ளார். அங்கு இறைவணக்க கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு வகுப்பறைக்கு சென்றுள்ளார். அப்போது தனது தோழிகளிடம் பூச்சி மருந்தை குடித்துவிட்டு வந்துள்ளதாகவும், தனக்கு மயக்கம் வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் சம்பவம் குறித்து ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளனர். ஆனால், ஆசிரியர் வருவதற்குள் அந்த மாணவி வகுப்பறையிலேயே மயங்கி விழுந்துள்ளார்.
உடனே ஆசிரியர்கள் அவரை மீட்டு அருகில் இருந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதற்குள் மாணவி செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், மாணவி தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
school student sucide in salem