10 -ம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த பக்கத்து வீட்டுபெண் - ஆத்திரத்தில் மாணவி எடுத்த விபரீத முடிவு.!! - Seithipunal
Seithipunal


10 -ம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த பக்கத்து வீட்டுபெண் - ஆத்திரத்தில் மாணவி எடுத்த விபரீத முடிவு..!!

சென்னையில் உள்ள அயனாவரம் அருகே பச்சைக்கல் வீராசாமி தெருவைச் சேர்ந்தவர் சபரி. இவருடைய மகள் அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் சமீபத்தில் நடைபெற்ற பொதுத்தேர்வை எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்தார். 

இந்த நிலையில், இன்று காலை 10 -ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவி 308 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். இதேபோல், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் மாணவி தேர்வில் 398 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். 

இதனால் தனக்கு அவமானம் என்று நினைத்த சபரியின் மகள் வீட்டில் இருந்த வலிப்பு மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது குறித்து தனது அம்மாவிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனே மகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றார். அங்கு மாணவிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து மாணவி தற்போது நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school student sucide attempt in chennai ayanavaram


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->