#விருதுநகர் : 4ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - பள்ளி தலைமை ஆசிரியர் கைது - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் நான்காம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமை ஆசிரியரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் கருப்பசாமி (55). இந்த பள்ளியில் 25 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று தண்ணீர் குடிப்பதற்காக தலைமை ஆசிரியர் அறைக்கு 9 வயதுடைய 4ஆம் வகுப்பு மாணவி வந்துள்ளார். 

அப்பொழுது கருப்பசாமி தண்ணீர் குடிக்க வந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து பள்ளி முடிந்து மாலை வீட்டிற்கு சென்ற மாணவி இதுகுறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய், இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் தலைமை ஆசிரியர் கருப்பசாமியை கைது செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

School head master arrested for sexually harassing a 4th class girl in virudhunagar


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->