ஓடும் பேருந்தில் இருந்து இறங்கிய பள்ளி மாணவி.. படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி.!
School girl jump in private running bus
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஈஸ்வரமூர்த்தி பாளையம் பகுதியை சேர்ந்த விக்கிரம ராஜா என்பவரின் மகள் இனியா ஸ்ரீ. இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
மாணவி இனியா ஸ்ரீ படிப்பில் சிறந்து விளங்கும் மாணவியாவார். இவர் தினமும் தனியார் பேருந்தில் பள்ளிக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் வழக்கம் போல் பள்ளிக்கு செல்வதற்காக அவ்வழியாக வந்த தனியார் பேருந்தில் ஏறி பயணம் மேற்கொண்டார்.
அப்போது மாணவி இழக்க வேண்டிய அரசு பள்ளி வளாகத்தின் முன்பு பேருந்தை நிறுத்தாமல் ஓட்டுநர் தொடர்ந்து ஓட்டியிருக்கிறார். இதுகுறித்து மாணவி பேருந்து நடத்துனர் இடம் கேட்கையில், பேருந்து நிறுத்த போதிய நேரமில்லை என்று பதிலளித்திருக்கிறார். அதற்கு உரிய விளக்கம் அளிக்க கேள்வி கேட்ட மாணவியிடம் உனக்கு வேண்டுமானால் ஓடும் பேருந்திலிருந்து இறங்கி கோ என்று பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
இதனால் கோபம் அடைந்த மாணவி இனியா ஸ்ரீ ஓடும் பேருந்தில் இருந்து அவசர அவசரமாக கீழே இறங்கி உள்ளார். அதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மாணவி பலத்த காயம் ஏற்பட்டது. அவரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் மாணவியை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மாணவி தேர்வுக்கு தயாராகி சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டது. மேலும் இந்த விபத்திற்கு காரணமான ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
School girl jump in private running bus