#தமிழகம் | பேருந்தை வழிமறித்து, காதலியின் பாய் பெஸ்டியை போட்டு பொளந்து கட்டிய காதலன்! - Seithipunal
Seithipunal


காதலி ஆண் நண்பருடன் அதிகம் நெருங்கி பழகி வந்ததால், ஆண் நண்பரை காதலன் சரமாரியாக தாக்கும் காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

திருச்சி மாவட்டம், சமயபுரம் அடுத்த தச்சங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கார்த்தி, இவரும் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது.

இதற்கிடையே கல்லூரி மாணவி, ஸ்ரீ ரங்கநாதன் என்ற தனியார் பேருந்து நடத்துனர் உடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இது குறித்து காதலன் கார்த்திக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்தி, தனது நண்பர்கள் குணா, ராக்கி ஆகியோருடன் சேர்ந்து, சமயபுரம் நால்ரோடு அருகே பேருந்தை வழிமறித்து, தனது காதலியின் ஆண் நண்பரான நடத்துனர் நாகேஸ்வரனை அடித்து உதைத்து தருமஅடி கொடுத்தனர்.

மேலும் தனியார் பேருந்தின் கண்ணாடிகளையும் கற்களால் அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் குறித்து நாகேஸ்வரன் அளித்த புகாரின் பேரில், சமயபுரம் காவல் நிலைய போலீசார் கார்த்திக் அவரின் நண்பர்கள் உட்பட மூவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Samayapuram Love issue attack


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->